Saturday, 1 December 2018

8.தீயகுணங்கள் 2 கொடுமை

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: இறுதித் தீர்ப்புநாள், கொடுமைக்காரனுக்கு இருள் மிக்கதாய் ஆகிவிடும். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) (புகாரி)

அறிவிப்பாளர் : அவ்ஸ் பின் ஷுரஹ்பீல் (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்: ஒருவன் ஒரு கொடுமைக்காரனுக்கு அவன் கொடுமைக்காரன் என்பதை அறிந்திருந்தும் துணைபுரிந்து வலுவூட்டினால், அவன் இஸ்லாத்தைவிட்டு வெளியேளிவிட்டான். (மிஷ்காத்)

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள், வறியவன் (பஞ்சைப்பராரி) என்பவன் யார்? என்று வினவினார்கள். மக்கள், எவரிடம் திர்ஹாமோ (வெள்ளி நாணயமோ) வேறெந்தப் பொருளுமோ இல்லையோ, அவரே எங்களில் வறியவர் ஆவார் என்று கூறினர். அண்ணலார் பதிலளித்தார்கள்: ஒருவன் மறுமைநாளில் தன் தொழுகையுடனும், நோன்புடனும் அல்லாஹ்விடம் ஆஜராவான். அவற்றுடன் அவன் உலகில் எவரையேனும் திட்டியிருப்பான், எவர் மீதாவது இட்டுக்கட்டி அவதூறு கூறியிருப்பான், 

எவரேனும் ஒருவரின் செல்வததைப் பறித்துத் தின்றிருப்பான், எவரையேனும் கொன்றுவிட்டிருப்பான், எவரையேனும் நியாயமின்றி அடித்திருப்பான். எனவே, அந்த அநீதிக்குள்ளானவர்கள் அனைவரிடையேயும் அவனது நன்மைகள் பங்கிடப்பட்டுவிடும். பிறகு அவனது நன்மைகள் தீர்ந்துபோய், அநீதிக்குள்ளானவர்களின் உரிமைகள் இன்னும் எஞ்சியிருந்தால் அவர்களின் பாவங்கள் அவனது கணக்கில் எழுதப்பட்டுவிடும். பிறகு, அவன் நரகத்தில் வீசி எறியப்படுவான். அத்தகையோரே உண்மையில் பஞ்சைப்பராரி ஆவர். (முஸ்லிம்)

அறிவிப்பாளர் : அலீ (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: கொடுமைக்குள்ளானவனின் முறையீட்டைக் குறித்து அஞ்சுங்கள். ஏனெனில், அவன் அல்லாஹ்விடம் தன் உரிமையையே கோருகின்றான். அல்லாஹ், உரிமையுடைய ஒருவனை உரிமை இழக்கச் செய்வதில்லை. (மிஷ்காத்)

கொடுமைக்காரனின் இந்த அநீதியின் காரணமாக அவனை இறைவன் பல்வேறு வகையான ஆபத்துகளில் அமைதியின்னைகளில் ஆழ்த்திவிடுகின்றான்.

No comments:

Post a Comment