Saturday, 1 December 2018

4.ஹஜ் - உம்றாவில் ஓத வேண்டிய துவாக்கள்

பயணத்தின் துஆ

உச்சரிப்பு: அல்லாஹுஅக்பர், அல்லாஹு அக்பர்,அல்லாஹு அக்பர், ஸுப்ஹானல்லதி ஸக்கர லனா ஹாதா வ மா குன்னா லஹு முக்ரினீன், வ இன்னா இலா ரப்பினா ல முன்கலிபூன், அல்லாஹும்ம இன்னா நஸ் அலுக குபீ ஸ குபரினா ஹாதல் பிர்ர வத் தக்வா வ மினல் அமலி மா தர்ழா, அல்லா ஹும்ம ஹவ்வின் அலைனா ஸகுபரனா வத்வி அன்னா புஅதஹ். அல்லாஹும்ம அன்தஸ் ஸாஹிபு குபிஸ் ஸகுபரி வல் கலீகுபது குபில் அஹ்ல், அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக மின் வஅஃதாயிஸ் ஸ குபரி வ கஆபதில் மன்ழரி வ ஸூயில் முன்கலபி குபில் மாலி வல் அஹ்ல்

பொருள்: அல்லாஹ் பெரியவன் (3முறை) இந்த வாகனத்தை வசப்படுத்தித் தந்த (இறை)வன் தூயவன்! உண்மையில் இதை வசப்படுத்தும் ஆற்றலை நாம் பெற்றிருக்கவில்லை! திண்ணமாக நாம் நம் இறைவன் பக்கமே திரும்பிச் செல்ல உள்ளோம்! யா அல்லாஹ்! இந்தப் பயணத்தில் நன்மையையும் பயபக்தியையும் நாங்கள் உன்னிடம் கோருகிறோம். நீ உவந்து கொள்கிற அமல்கள் செய்யும் பாக்கியத்தைக் கேட்கிறோம். யா அல்லாஹ்! இந்தப் பயணத்தை எங்களுக்கு நீ இலகுவாக்குவாயாக! இதன் தொலைவையும் எங்களுக்கு நீ சுருட்டித் தருவாயாக! யா அல்லாஹ்! நீயே பயணத்தின் தோழன்., எங்கள் குடும்பத்தில் பிரதிநிதி! யா அல்லாஹ்! பயணத்தின் சிரமம், பதற்றமான தோற்றம், பொருளிலும் குடும்பத்திலும் நட்டத்தோடு திரும்பி வருதல் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்!

தல்பியா

உச்சரிப்பு: லப்பை(க்)க (அ)ல்லாஹும்ம லப்பைக், லப்பை(க்)க லாஷரீ(க்)க ல(க்)க லப்பைக், இன்னல் ஹம்த வன் நிஃமத்த ல(க்)க வல் முல்க், லாஷரீக்க லக்,,

பொருள்: இதோ! வந்து விட்டேன். இறைவனே! இதோ! ஆஜராகிவிட்டேன். உனக்கு இணை துணை யாருமில்லை. திண்ணமாக அனைத்துப் புகழும் உனக்குரியதே. ஆட்சியதிகாரமும் உனக்கு உரியதே. மேலும் உனக்கு யாதொரு இணையுமில்லை.)

அல் மஸ்ஜிதுல் ஹராம் எனும் புனிதமிகு பள்ளி வாசலில் நுழையும் போது ஓதும் துஆ: (பொதுவாக எந்தப் பள்ளி வாசலில் நுழையும்போதும் ஓதவேண்டியது இதுவே!)

உச்சரிப்பு: பிஸ்மில்லாஹி வஸ்ஸலாது வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹி அவூது பில்லாஹில் அழீம், வபி வஜ்ஹிஹில் கரீம், வ ஸுல்தானி ஹில் கதீம், மினஷ் ஷைத் தானிர் ரஜீம், அல்லாஹும் மகுப்தஹ்லீ அப் வாப ரஹ்மதிக்

பொருள்: அல்லாஹ்வின் திருப்பெயரால்! இறையருளும் சாந்தியும் இறைத்தூதர் மீது உண்டாவதாக! மகத்துவமிக்க அல்லாஹ்வைக் கொண்டும் அவனது திருமுகத்தைக் கொண்டும் அவனது நிலையான மேலாதிக் கத்தைக் கொண்டும் விரட்டப்பட்ட ஷைத் தானை விட்டு பாதுகாவல் தேடுகிறேன். யா அல்லாஹ்! உன் அருள் வாயில்களை எனக்குத் திறந்து விடுவாயாக!

தவாப் தொடங்க ஓதும் துஆ

உச்சரிப்பு: அல்லாஹும்ம ஈமான (ன்) ம் பிக வ தஸ்தீக (ன்) ம் பி கிதாபிக வபாஅ (ன்ம்) பி அஹ்திக வத்திபாஅ (ன்)ல்லி சுன்ன(த்)தி நபிய்யி(க்)க முஹம் மதின் ஸல்லல்லாஹீ அலைஹி வ ஸல்லம்

பொருள்: யா அல்லாஹ்! உன்மீது ஈமான் கொண்டவனாகவும் உன் வேதத்தை உண்மையென ஏற்றுக்கொண்டவனாகவும் உன்னிடம் முன்னர் செய்த உடன்படிக் கையை நிறைவேற்றியவனாகவும் உன் திருத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிமுறை பின்பற்றியவனாகவும் (தவாபை தொடங்கு கிறேன்)

தவாபில் (ஹஜருல் அஸ்வத் வரும்போது ஓதும்) துஆ
உச்சரிப்பு: ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத (ன்வ்) வ ஃபில் ஆகிரதி ஹஸ னத (ன்வ்) வ கினா அதாபன் நார் பொருள்: எங்கள் இறைவனே! எங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மை வழங்குவாயாக! மேலும் நரக வேதனையில் இருந்தும் எங்களைக் காத்தருள்வாயாக!

ஸயி தொடங்கும்பொழுது ஸஃபா குன்றில் சற்று ஏறி நின்று ஓதுவது

உச்சரிப்பு: இன்னஸ் ஸஃபா வல் மர்வத மின் ஷஆயிரில்லாஹ், நப்தஉ பிமா பத அல்லாஹு பிஹ்

பொருள்: நிச்சயமாக! ஸபா - மர்வா (எனும் இரு குன்றுகள்) அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும்.- (இந்த வசனத்தில்) அல்லாஹ் முதலில் கூறியுள்ளதைக் கொண்டே நாமும் (ஸயியை) தொடங்குகிறோம்.

அத்துடன் ஸஃபாவில் ஓதும் திக்ர்

உச்சரிப்பு: அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர். லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வ யுமீத்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர், லா இலாஹ இல்லலாஹு வஹ்தஹு லா ஷரீ(க்)க லஹு அன்ஜஸ வஃதஹு வ நஸர அப்தஹு வ ஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹ்

(பொருள்:) அல்லாஹ் பெரியவன், (3 தடவை) அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழ் அனைத்தும் அவனுக்கே! அவனே வாழ்வையும் மரணத்தையும் கொடுக்கிறான். மேலும் அவன் அனைத்தின் மீதும் பேராற்றல் கொண்டவன். அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு யாதொரு இணையும் இல்லை. தனது வாக்குறுதியை நிறைவேற்றினான். தன் அடியாருக்கு உதவி செய்தான். அவன் ஒருவனே எல்லாப் பிரிவினரையும் தோற்கடித்தான். (குறிப்பு: இந்த திக்ர் ஓதிய பிறகு துஆ. பிறகு திக்ர். பிறகு துஆ ஓதவும்)

நபி (ஸல்) அவர்கள் - துஆக்களில் சிறந்தது அரஃபா நாளின் துஆ தான்., நானும் எனக்கு முன் சென்ற அத்தனை நபியமார்களும் கூறிய இந்த திக்ர்தான் மிகவும் சிறந்ததாகும் என்று சொன்னார்கள். அந்த திக்ர் இதுதான்:

உச்சரிப்பு: லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்) லஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வ யுமீத்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்

பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறை வன் இல்லை. அவன் தனித்தவன்., அவனுக்கு யாதொரு இணையும் இல்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே. புகழ் அனைத்தும் அவனுக்கே. வாழ்வையும் மரணத்தையும் அவனே கொடுக்கிறான். மேலும் அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் கொண்டவன்.

No comments:

Post a Comment